இங்கிலாந்தை சேர்ந்த 10 வயது சிறுவனான கேய்ரான் வில்லியம்சன், இயற்கை காட்சிகளை தத்ரூபமாக வரையும் திறன் கொண்டவர். மிக சிறு வயதிலேயே வரைய துவங்கிய இவர், அண்மையில் தனது ஓவியங்களை சுமார் 340000 பவுண்டுகளுக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 3,09,21,922 ரூ ) விற்றுள்ளார்.
மிகுந்த கலைநயத்தோடு தோற்றமளிக்கும் இந்த சிறுவனின் ஓவியங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்ட 20 நிமிடங்களில், வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல், தொலைபேசி மூலம் இந்த ஓவியங்களை வாங்கியுள்ளனர்.
கேய்ரான் வில்லியம்சனின் ஒரு ஓவியம் மட்டும் 30,000 பவுண்டுகளுக்கு விற்பனையானதும், கேய்ரான் ஓவியம் வரைந்து சம்பாதித்த பணம் 1.5 மில்லியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சிறுவன் வரைந்த ஓவியங்கள் இடம்பெறும் காலேரியில் பணிபுரியும் இவரது பெற்றோரான கெய்த் மற்றும் மிச்சேல், அவர்களது மகனான 10 வயது கேய்ரான் வில்லியம்சன் மற்ற சிறுவர்களை போல ஒரு சிறுவன் தான் எனவும், அவருக்கு கால்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்குமெனவும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment