போடி திருமலாபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையானுக்கு தங்கத்தாலான பாதம் தயாரித்து வழங்க முடிவு செய்தனர்.அதன்படி, ரூ.1 கோடி செலவில் சுமார் 4 கிலோ எடையில் தங்கப் பாதம் வடிவமைக்கப்பட்டது.
இதற்கு, தொழிலதிபரின் வீட்டில் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.இதற்காக, திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அர்ச்சகர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். பின்னர், அந்த தங்கப் பாதம் பலத்த பாதுகாப்புடன் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment