News Update :

பெருமாளுக்கு பொற்பாதங்கள்

Tuesday, September 17, 2013

போடி தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கிய தங்கப் பாதம், திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்க பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

போடி திருமலாபுரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் குடும்பத்தினர், திருப்பதி ஏழுமலையானுக்கு தங்கத்தாலான பாதம் தயாரித்து வழங்க முடிவு செய்தனர்.அதன்படி, ரூ.1 கோடி செலவில் சுமார் 4 கிலோ எடையில் தங்கப் பாதம் வடிவமைக்கப்பட்டது.

இதற்கு, தொழிலதிபரின் வீட்டில் வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.இதற்காக, திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அர்ச்சகர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். பின்னர், அந்த தங்கப் பாதம் பலத்த பாதுகாப்புடன் திருப்பதி தேவஸ்தானத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.