உள்நாட்டு காரணிகளால் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் மறுக்க கூடாது. அமெரிக்க ஊக்க பிரச்சினை போன்ற சர்வதேச காரணிகள் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் சிக்கலான பொருளாதார பிரச்சனையை நாடு எதிர்க்கொண்டுள்ளது. நாளை பொருளாதார பிரச்சனை குறித்து மாநிலங்களவையில் அறிக்கை அளிக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இதற்கிடையே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத்யாதவ் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் மாநிலங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது என்றும் கூறினார்.
இதற்கிடையே ரூபாயின் மதிப்பு சரிவு குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.


0 comments:
Post a Comment