News Update :

அஞ்சலியின் ரீஎன்ட்ரி

Monday, August 26, 2013

நடிகை அஞ்சலி வீட்டை விட்டு வெளியேறி ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளார். சித்தி கொடுமைப்படுத்தியதால் வெளியேறியதாக பரபரப்பு பேட்டியும் அளித்தார். சில நாட்கள் தலைமறைவுக்கு பிறகு மீண்டும் வந்து
 தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.


சென்னைக்கு வர மாட்டேன் என்றும் தமிழ் படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் கூறி வந்தார். ஆனால் டைரக்டர் ஹரி ‘சிங்கம்–2’ படத்தில் வற்புறுத்தி ஒரு குத்து பாடலுக்கு ஆட வைத்தார். தற்போது லாரன்சும் தனது ‘முனி–3’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் அஞ்சலி நடிக்கிறார்.


ஏற்கனவே ‘முனி’, ‘காஞ்சனா’ படங்கள் ஹிட்டானதால் முனியின் 3–ம் பாகமாக ‘கங்கா’ என்ற பெயரில் இந்த படத்தை தமிழ், தெலுங்கில் லாரன்ஸ் எடுக்கிறார். பேய் படமாக தயாராகிறது. இதில் டாப்சி, கோவை சரளா, தேவதர்ஷினி போன்றாரும் நடிக்கின்றனர். தமிழில் விஷாலுடன் அஞ்சலி நடித்த ‘மதகஜராஜா’ படமும் செப்டம்பர் 6–ல் ரிலீசாக உள்ளது.

Share this Article on :

0 comments:

Post a Comment

 
© Copyright Good News | Design by Herdiansyah Hamzah | Published by Borneo Templates | Modified by படுகை.காம்.